2012-09-11 16:35:34

சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் சட்டப்படி தண்டிக்கப்படும்- ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை


செப்.11,2012. சிரியா நாட்டில் இடம்பெறும் சண்டையில் அப்பாவி குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் சட்டப்படி தண்டிக்கப்படாமல் விடப்படாது என்று ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத்தின் இயக்குனர் நவிபிள்ளை எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 21வது கூட்டத்தில் இவ்வாறு எச்சரித்த நவிபிள்ளை, சிரியா விவகாரத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு ஐ.நா.பாதுகாப்பு அவையையும் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் மனித உரிமை நீறல்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், மனிதாபிமான நிலைகளும் நாடு முழுவதும் வேகமாகம் மோசமடைந்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.
சிரியாவில் போரிடும் தரப்புகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சட்டத்தை மதித்து நடக்குமாறும் கேட்டுள்ளார் நவிபிள்ளை.








All the contents on this site are copyrighted ©.