2012-09-08 14:00:19

ஹசாரிபாக் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்


செப்.08,2012. இந்தியாவின் ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Jojo Anand அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய இயேசு சபை ஆயர் Charles Soreng அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, Simdega மறைமாவட்டத்தின் மறைபரப்புப் பணி மையத்தின் இயக்குனர் அருள்பணி Jojo Anandஐ, ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்துள்ளார்.
1959ம் ஆண்டு மே 17ம் தேதி Simdega மறைமாவட்டத்தின் Minjiutgarha-Kutungia என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் ஆனந்த், 1992ம் ஆண்டில் குருவானார். 2005ம் ஆண்டில் உரோம் சலேசியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் மறைக்கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், அவ்வாண்டிலிருந்து Simdega மறைமாவட்ட குருகுல முதல்வராகவும் பணியாற்றினார். அத்துடன், மறைபரப்புப்பணி மையத்தின் இயக்குனராக இருந்து கொண்டு அம்மறைமாவட்ட குருத்துவ மாணவர்களையும் வழிநடத்தி வந்தார்.








All the contents on this site are copyrighted ©.