2012-09-08 14:07:32

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் நம்பிக்கை நிறைந்த ஒரு செயல்


செப்.08,2012. திருத்தந்தையின் லெபனன் நாட்டுத் திருப்பயணம் மிகுந்த துணிச்சல் மற்றும் நம்பிக்கை நிறைந்த ஒரு செயல் என்று பன்னாட்டு அளவில் கூறப்பட்டு வருகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் வானொலிக்கும் வத்திக்கான் தொலைக்காட்சிக்கும் அளித்த வார நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியுள்ள அருள்தந்தை லொம்பார்தி, கத்தோலிக்க சமுதாயம் அதிகமாக இருக்கின்ற லெபனன் நாட்டுக்குத் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள இத்திருப்பயணம், சிரியாவில் சண்டை தொடங்குவதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்று கூறினார்.
சிரியாவில் இடம்பெறும் சண்டை திருத்தந்தையின் திருப்பயணத்தை நேரிடையாகப் பாதிக்காது எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் சொல்லப்பட்ட பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணம் இம்மாதம் 14 முதல் 16 வரை நடைபெறவிருக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.