செப்.08,2012. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் புதிய பாத்திமா அன்னைமரி ஆலயம் ஒன்றைத்
இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்துகிறார் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ. திருத்தந்தையின்
பிரதிநிதியாக கஜகஸ்தான் குடியரசில் இப்புதன் முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால்கள்
அவைத் தலைவரான கர்தினால் சொதானோ, அந்நாட்டின் Karaganda நகரத்தில் எழுப்பப்பட்டுள்ள பாத்திமா
அன்னைமரி ஆலயத்தைத் திருநிலைப்படுத்தவுள்ளார். முன்னாள் சோவியத் யூனியன் ஆட்சியில்
Gulags எனப்படும் கட்டாயவேலை முகாம்கள் பல, இந்த Karaganda நகரத்தில் இருந்தன என்று செய்திகள்
கூறுகின்றன.