2012-09-08 14:05:26

23வது அனைத்துலக மரியியல் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை


செப்.08,2012. வருகிற அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் உண்மையான அருளின் ஆண்டாக அமையவும், இதில் அன்னைமரியாவின் விசுவாசம், முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவும் மரியியல் வல்லுனர்கள் உதவுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறைவனின் பிள்ளைகள் என்ற தங்களது அழைப்பை மிகுந்த அர்ப்பணத்தோடும், ஆவலோடும், கொள்கைப்பிடிப்போடும் வாழ்வதற்கு கிறிஸ்தவர்கள் அன்னமரியை கலங்கரை விளக்காக நோக்குவதற்கு மரியியல் வல்லுனர்கள் உதவுமாறும் திருத்தந்தை பரிந்துரைத்தார்.
23வது அனைத்துலக மரியியல் மாநாட்டில் கலந்து கொண்ட ஏறக்குறைய 350 பிரதிநிதிகளை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று அருளாளர் பாப்பிறை 23ம் அருளப்பர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் இறைவனின் தாய் மரியா பற்றிக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
431ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று, எபேசு பொதுச்சங்கத்தில் மரியா, இறைவனின் தாய் என்று அறிவிக்கப்பட்டதையும் எடுத்துச் சொன்ன திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கவிருக்கும் இவ்வேளையில், அன்னை மரியா நமக்கு விசுவாசத்தின் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.