மன்னார் மறைமாவட்ட மக்கள் பல கூறுகளில் நல்லதொரு வாழ்க்கையை எதிர்நோக்குகின்றனர் – மன்னார்
ஆயர்
செப்.07,2012. இலங்கையில் போர் முடிந்த காலத்திற்குப் பின்னர் மன்னார் மறைமாவட்ட மக்கள்
பல கூறுகளில் நல்லதொரு வாழ்க்கையை எதிர்நோக்குகின்றனர் என்று அம்மறைமாவட்ட ஆயர் இராயப்பு
ஜோசப், அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷேவுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியுள்ளார். நீதியுடன்கூடிய
நிலையான அமைதிக்கு இட்டுச்செல்லும் ஒப்புரவுப் பாதையில் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன
என்றுரைக்கும் ஆயரின் கடிதம், பிறமதத் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன்
சேர்ந்து நிலையான அமைதியையும் ஒப்புரவையும் அடைவதற்கும், அதில் மக்கள் எதிர்கொள்ளும்
பிரச்சனைகளைக் களைவதற்கும் ஆயர்கள் முயற்சித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின்
மனங்களை வெல்வதற்குக் கடும் மனித மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தாங்கள் தொடர்ந்து
எதிர்கொள்வதாகவும் மன்னார் ஆயரின் கடிதம் கூறுகின்றது.