2012-09-05 16:16:39

பணி உயர்வில் இட ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை முடிவு


செப்.05,2012. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப்பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுப்பணி சேர்க்கையில் இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக இருந்தாலும், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முதல் முறையாக இப்போதுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்குமுன் உத்திரப்பிரதேச அரசு இது போன்ற நடைமுறையைக் கொண்டு வந்தபோது, உச்ச நீதிமன்றம் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது என்று அதை நிராகரித்துவிட்டது.
இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அதைச் சமாளிக்கும் வகையில் அரசியல் அமைப்பின் நான்கு எண்களைத் திருத்தவும் அரசு முடிவு செய்துள்ளது எனவும் ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய அரசுப் பணிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கானப் பணியிடங்களை நிரப்ப அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.