வளரும் நாடுகளில் நகர்ப்புறமயமாதலைக் குறைப்பதற்கு கொள்கைகள் வகுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரி
வலியுறுத்தல்
செப்.04,2012. வளரும் நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாதலைக் குறைப்பதற்கு
கொள்கைகள் வகுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இத்தாலியின்
நேப்பில்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.குடியிருப்பு நிறுவன இயக்குனர்
Joan Clos, வளரும் நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாதலைச் சுனாமிக்கு ஒப்பிட்டுப்
பேசி, இந்த நிலை, அந்த நகரத்தை நிர்வகிப்பதற்குரிய திறமைகளையும் விஞ்சிவிடும் என்று எச்சரித்தார். உலகின்
தெற்கே, வளர்ச்சியோடு நகர்ப்புறமயமாதலும் வேகமாக வளருவதைக் காண முடிகின்றது என்றுரைத்த
க்ளோஸ், நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கு நகரங்கள் மீண்டும் வடிவமைக்கப்பட
வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நகரங்களுக்கென வகுக்கப்படும் திட்டங்கள் குடிமக்களுக்கு
வேலைவாய்ப்புக்களையும் வளமையையும் நாடுகளுக்கு உதவ வேண்டுமெனக் கூறிய அவர், வளரும் நாடுகளில்
நகர்ப்புறமயமாதலைக் களைவதற்கு கொள்கைகள் வகுக்கப்படுமாறு வலியுறுத்தினார்.