2012-09-03 16:47:57

ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்


செப். 03, 2012. ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது ஏழைகளே என்பது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் தொடர்பான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் வேளை, வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் எனக்கூறும் இவ்வாய்வு, பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பணக்காரர்களோ, மேலும் மேலும் பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர், ஆனால் ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்குப் பிடித்தவர்களுடனும் பொழுதைக் கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றது.
கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், "உறவுகள் போனாலும், நட்புப் போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர் எனவும், கலிபோர்னியா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வு முடிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.