2012-08-30 15:41:39

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை


ஆக.30,2012. தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்குப் பாதிப்புக்கள் ஏற்படும் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர். எனவே, இலங்கையின் வெளியுறவுத்துறை இந்த விடயத்தை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அணுமின் உற்பத்தியை மேற்கொள்ளும் முன்னர் இந்திய அரசு அருகில் உள்ள நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பில் பேசிய ஜெகத் குணவர்த்தன கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் வரவிருக்கும் ஆபத்துக்களை மனதிற்கொண்டு, இலங்கை அரசு முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்கவேண்டும் என்றும் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் இலங்கையின் புத்தளத்தில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது என்பதை ஜெகத் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.