Home Archivio
2012-08-30 15:15:16
கவிதைக் கனவுகள் – பகை நீங்கும் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
துணிந்தால் துன்பமில்லை
சோர்ந்துவிட்டால் இன்பமில்லை!
இனிமை கலந்துவரும் பாட்டிலே-மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே!
கசக்கும் வாழ்விலே
கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப,
பறவையுண்டு பாரிலே!
துடிக்கும் இதயங்களே தாளம்-காற்றில்
மிதக்கும் ஓசையெல்லாம் கானம்
ஆராரோவென்று அன்னை பாடக் கண்டு
அமைதியிலே குழந்தை தூங்குவதுமுண்டு
வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
வருவது கண்டு மனம் பொங்கும் மதுசிந்தும்
பகைமை நீங்கிவிடும் பாட்டாலே-பெரும்
பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே!
All the contents on this site are copyrighted ©.