உலகக் கத்தோலிக்கருக்கு உதவும் திருப்பீடத்தின் புதிய இணையதளம்
ஆக.29,2012. வருகிற அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு குறித்த விபரங்களைப் பொதுநிலையினர்
அறிந்து கொள்வதற்கு உதவியாக புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது திருப்பீட பொதுநிலையினர்
அவை. இந்தப் புதிய இணையதளம் குறித்து CNA செய்தி நிறுவனத்திடம் விளக்கிய இத்திருப்பீட
அவையின் பெண்கள் பிரிவின் Ana Cristina Betancourt, திருஅவையில் தங்களது பங்கையும் அழைப்பையும்
இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துப் பொதுநிலை விசுவாசிகளுக்குமென இந்தப்
புதிய இணையதளம் திறக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். பொதுநிலையினர் தங்களது அழைப்பை
வாழ்வதற்குத் திருத்தந்தை வழங்கும் வழிமுறைகள், இன்னும், திருப்பீட பொதுநிலையினர் அவையின்
அன்றாடச் செயல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் இந்த இணையதளம் உதவும் என்றும்
அவர் கூறினார். திருத்தந்தை ஆறாம் பவுல், திருப்பீட பொதுநிலையினர் அவையை 1967ம் ஆண்டில்
உருவாக்கினார். இந்த அவை திருப்பீடத்தில் நிரந்தரமாகச் செயல்படும் நோக்கத்தில் இதே திருத்தந்தை
1976ம் ஆண்டில் இந்த அவையை மீண்டும் உறுதி செய்தார். திருப்பீட பொதுநிலையினர் அவையின்
இணையதள முகவரி www.laici.va.