ஆக.29,2012. சிரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கும்
அலெப்போ இலத்தீன்ரீதி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaroவுக்கும் ஆதரவாகச்
செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது CELRA என்ற அரபுப் பகுதிகளின் இலத்தீன் ரீதி ஆயர் பேரவைகளின்
கூட்டமைப்பு. சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்குக் கடும் கண்டனம்
தெரிவித்துள்ள இந்த ஆயர்கள் கூட்டமைப்பு, வன்முறை என்றென்றும் நிலைத்திருக்காது என்று
சொல்லி, சிரியா கிறிஸ்தவர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது. ஜோர்டன்
நாட்டு Ammanல் வருகிற செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் CELRA கூட்டமைப்பின்
ஆண்டுக் கூட்டத்தில் அலெப்போ ஆயர் கலந்துகொண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்வார் என்றும்,
சிரியாவில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு ஆதரவாகச் செய்தி ஒன்று இக்கூட்டத்தில்
கையெழுத்திடப்பட்டு வெளியிடப்படும் என்றும் CELRA கூட்டமைப்பின் செய்தி கூறுகிறது.