2012-08-28 15:10:40

பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள Rimsha Masih 14 வயது நிரம்பியவள் : மருத்துவ ஆய்வு


ஆக.28,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள Rimsha Masih 14 வயது நிரம்பியவள் என மருத்துவ ஆய்வுக் குழு கூறுவதாகவும், இதனால் அவள் இளம் குற்றவாளிகளுக்குரிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்று இச்செவ்வாயன்று சொல்லப்பட்டுள்ளதாகவும் அச்சிறுமியின் வழக்கறிஞர் Tahir Naveed Chaudhry தெரிவித்தார்.
Rimshaவின் மனநலம் அவளை 14 வயது நிரம்பியவளாகக் காட்டுவதாகவும், அவளது மனநலம், அவளது வயதுக்கு ஒத்ததாக இல்லையெனவும் அவளைப் பரிசோதித்த மருத்துவ ஆய்வுக் குழு கூறுவதாகவும் Chaudhry தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இராவல்பிண்டி சிறையில் Rimshaவைச் சந்தித்த போது அவள் அழுது கதறினாள் என்றும் Chaudhry கூறினார்.
இதற்கிடையே, ரிம்ஷாவின் விவகாரத்தால் வன்முறைக்குப் பயந்து காடுகளில் வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மரங்களை வெட்டி கோவில்கள் அமைத்து வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டார்.
Rimsha மீதான இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.