2012-08-28 14:58:53

அலெப்போ கத்தோலிக்கப் பேராயர் லெபனனில் தஞ்சம்


ஆக.28,2012. சிரியா நாட்டு அலெப்போ மெல்கித்தே கத்தோலிக்கப் பேராயர் Jean-Clement Jeanbartன் இல்லம் புரட்சியாளர்களால் சூறையாடப்பட்டதையடுத்து அப்பேராயர் லெபனன் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளார் என வத்திக்கானின் பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
அலெப்போ மாரனைட்ரீதி கத்தோலிக்கப் பேராயர் இல்லத்தின் அலுவலகங்கள், Byzantine கிறிஸ்தவ அருங்காட்சியகம் ஆகியவையும் புரட்சியாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.
புரட்சியாளர்களின் இந்த அட்டூழியங்கள் குறித்துக் கண்டனம் தெரிவித்த சிரியா நாட்டுத் தலத்திருஅவையின் பேச்சாளர் ஒருவர், இந்தப் புரட்சியாளர்கள் சமயப் போர் தொடங்குவதற்கு விரும்புவதாகவும், சிரியா மக்களை வகுப்புவாத மோதல்களுக்குள் இட்டுச் செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் சண்டையினால், அந்நாட்டின் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள், துருக்கி, லெபனன், ஜோர்டன் மற்றும் ஈராக் நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர் என ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.