2012-08-27 16:33:29

பழங்குடி சிறுமிகளின் கல்வி தொடர கிறிஸ்தவ அமைப்பின் உதவி


ஆக.27,2012. இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலச் சிறுமிகள் தங்கள் கல்வியைத் தொடர உதவும் பொருட்டு, மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியுள்ளது கிறிஸ்தவ துயர்துடைப்பு நிறுவனமான World Vision.
மகராஷ்டிர மாநிலத்தின் கிராமங்களில் வாழும் பழங்குடி இனங்களிடையே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சேவையாற்றி வரும் இந்த கிறிஸ்தவ அமைப்பு, சிறுமிகளின் கல்வியில் கவனம் செலுத்துவதுடன், விவசாயிகளுக்குப் பயிரிடத் தேவையானப் பொருட்களையும், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது.
பள்ளிகளுக்குத் தேவையான இருக்கைகளையும், விளையாட்டுத் துறைக்குத் தேவையானப் பொருட்களையும் கொடுத்து உதவி வருகிறது World Vision கிறிஸ்தவ அமைப்பு.
ஆரம்பக்கல்வியை தங்கள் கிராமங்களில் படிக்கும் மாணவிகள், உயர் நிலைக்கல்வியைத் தொடர தூர இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு அண்மையில் 65 மிதி வண்டிகளை இலவசமாக வழங்கி, அவர்கள் கல்வியைத் தொடர உதவியுள்ளது இக்கிறிஸ்தவ அமைப்பு.







All the contents on this site are copyrighted ©.