மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் வீரரின் முன்னேற்றத்திற்குக் கத்தோலிக்கப் பள்ளியும்
காரணம்
ஆக.23,2012. தான் வளர்ந்த குடும்பமும், தன்னை உற்சாகப்படுத்திய கத்தோலிக்கப் பள்ளியும்
தனது முன்னேற்றத்திற்கு பெரும் காரணங்கள் என்று ஒலிம்பிக் வீரர் ஒருவர் கூறினார். ஆகஸ்ட்
29 வருகிற புதனன்று இலண்டன் நகரில் ஆரம்பமாகும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் பல ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளவிருக்கும் Brian
Siemann என்ற இளைஞர் இவ்வாறு கூறினார். தான் பிறந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட
தவறான ஒரு சிகிச்சையால், பிறப்பிலிருந்தே இடுப்புக்குக் கீழ் உணர்விழந்த நிலையில் பிறந்த
Siemann, Notre Dame என்ற கத்தோலிக்கப் பள்ளியில் சேர்ந்தபோது, அங்கிருந்த உடற்பயிற்சி
ஆசிரியர் அளித்தத் தூண்டுதலால் தடகளப் போட்டிகளில் ஈடுபட முடிந்தது என்று கூறினார். ஆகஸ்ட்
29ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி முடிய நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 110,
200, 400, 800 மீட்டர் ஓட்டங்களிலும், மாரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொள்ளவிருக்கும்
Siemann, தான் அடைந்துள்ள இந்த உயர் நிலைக்குத் தன் குடும்பத்தினரும், பள்ளியும், தான்
வளர்ந்த ஊர்ச்சமுதாயமுமே காரணம் என்று கூறினார்.