2012-08-21 16:16:37

வடகிழக்கு மாநில மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு புனே ஆயர் வலியுறுத்தல்


ஆக.21,2012. இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள் எந்தவிதத் தாக்குதலுக்கும் உள்ளாகாதவாறு பாதுகாக்கப்படுமாறும் அவர்கள் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ்வதற்கு உதவுமாறும் புனே ஆயர் Thomas Dabre மகாராஷ்டிர அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஞ்ஞாயிறு திருப்பலி முடிந்து புனே நகரில் வாழும் ஏறத்தாழ 500 வடகிழக்கு மாநில மக்களைச் சந்தித்துப் பேசிய ஆயர் தாப்ரே இவ்வாறு மாநில அரசை வலியுறுத்தினார்.
சமத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகிய பண்புகளைக் கொண்ட நகரம் புனே எனவும், இந்நகரத்தில் இச்சனிக்கிழமை இரவு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நகரத்தின் அமைதியைக் குலைப்பதாக இருக்கின்றன எனவும் ஆயர் கவலை தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.