கவிதைக் கனவுகள் – மனித தேசம் (கவிஞர் எஸ்.முருகவேல்)
மனிதா... விசாலத்தோடு பார் அப்போதுதான் நீ மனிதனென்ற விலாசம் இவ்வுலகிற்குப்
புரியும். மனிதா.... உனக்குள்ளிருக்கும் சக்தி ஏழேழு லோகத்தைப் படைக்க வல்லது. எல்லையற்றது.
ஏன் மனிதா.... இறைவனைத் தேடி ஏமாந்து போகிறாய்... மனிதா... காவிரியும் வைகையும்
நம்மை ஒற்றுமைப்படுத்தப் பிறந்தவை நீயேனின்று அதைக் கூறுபோடப் பார்க்கிறாய்..... மனிதா.... உடல்
வண்ணம் பார்த்து இனம் சேர்க்காதே.... இரத்தத்தின் வண்ணம் பார்த்து ஒன்று சேர்.... மனிதா... எல்லாருக்கும்
மரணம் நிச்சயம்... நீ ஏன் ஆயுதமேந்தி அலைகிறாய்... மனிதா..... நீ கோடி கோடியாகச்
சேர்த்தாலும் ஆறடிதான் உனக்கு....
மனிதா.... உன் ஒவ்வோர் உறக்கமும் உன்னை
உயிரோடு எழுப்புமா? சிந்தித்துப் பார்.. விரைந்து எழு... ஒற்றுமையோடு கைகுலுக்கு...
மனிதா... உலகில்
இனமில்லை.... மதமில்லை.... ஏன், மொழியுமில்லை... “அன்பு” ஒன்றே நமது உயிரின் எல்லை......