சொல்லாலும் செயலாலும் நீதிக்குச் சாட்சியாக வாழ அழைப்பு
ஆக.18,2012. இந்தியக் கத்தோலிக்கர் அனைவரும் சொல்லாலும் செயலாலும் நீதிக்குச் சாட்சியாக
வாழ வேண்டுமென இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட்19,
இஞ்ஞாயிறன்று இந்தியாவில் நீதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள
இவ்வாணையம், கத்தோலிக்க நிறுவனங்கள் நீதிக்குச் சாட்சிகளாக எவ்வாறு வாழ முடியும் என்பதைச்
சிந்திக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தலத்திருஅவையில், 1983ம் ஆண்டிலிருந்து
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பின்வரும் ஞாயிறு நீதி ஞாயிறாகக் கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது.