சாஹெல் பகுதியின் மனிதாபிமான உதவிகளுக்கு Christian Aid அமைப்பு மீண்டும் விண்ணப்பம்
ஆக.18,2012. மேற்கு ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைக் களைவதற்கு
பன்னாட்டு உதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளது “Christian Aid” என்ற கிறிஸ்தவ மனிதாபிமான
அமைப்பு. சாஹெல் பகுதியில் ஏறக்குறைய ஒரு கோடியே 90 இலட்சம் மக்களுக்கு அவசர மனிதாபிமான
உதவிகள் தேவைப்படுவதாகக் கூறியுள்ள இவ்வமைப்பின் இயக்குனர் Nick Guttmann, பத்து இலட்சத்துக்கு
மேற்பட்ட சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறுகின்றனர் என்று கூறியுள்ளார். இப்பகுதியில்
உதவிகள் தேவைப்படும் 7,90,000 குடும்பங்களுக்கென 7 கோடி டாலர் நிதியுதவிக்கு ஐ.நா.வின்
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 2012ம்
ஆண்டு தொடக்கத்தில் திருப்பீடமும் சாஹெல் பகுதியின் 9 நாடுகளுக்கென 20 இலட்சம் டாலரை
வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.