2012-08-18 15:37:07

ஐ.நா. அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம்


ஆக.18,2012. வருகிற செப்டம்பர் 14ம் தேதி ஐ.நா மனித உரிமைகள் அவை அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் அவையின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்து மாதம் அந்நாடு செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் இலங்கையின் வடபகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனித உரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர் என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.