2012-08-18 15:34:37

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு ஐ.நா.பாராட்டு


ஆக.18,2012. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னேற்றம் காணப்படுவதாக ஐ.நா.பேச்சாளர் Subine Nandy கூறினார்.
இலங்கையில் 2009ம் ஆண்டில் போர் முடிந்திருந்தாலும், கிராமங்களிலும், காடுகளிலும், சாகுபடி நிலங்களிலும் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மக்களின் உயிர்வாழ்வுக்குக் கடும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றுரைத்த Nandy, இவ்வெடிகளை அகற்றும் தற்போதைய பணிகளை நோக்கும் போது, இவ்வெடிகள் விரைவில் அகற்றப்படக்கூடும் என்ற நம்பிக்கை தெரிவதாகக் கூறினார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி இவ்வாண்டு ஜூன்வரை, ஏறக்குறைய 5 இலட்சம் நிலக்கண்ணி வெடிகளும், பீரங்கிகளைத் தாக்கும் 1,395 வெடிகளும், ஏறக்குறைய 4 இலட்சம் வெடிக்காத சிறிய குண்டுகளும் அகற்றப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.