ஆஸ்திரேலியாவில் கடற்கரைகளில் தடுப்பு முகாம்களைத் திறப்பது மனித உரிமைக்கு எதிரான செயல்
: ஐ.நா. எச்சரிக்கை
ஆக.18,2012. ஆஸ்திரேலியாவுக்குக் கடல் பயணம் செய்து குடியேறுவோருக்கும் அடைக்கலம் தேடுவோருக்குமென
கடற்கரைகளில் தடுப்பு முகாம்களை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து எச்சரித்துள்ளார்
ஐ.நா. மனித உரிமைகள் அவை இயக்குனர் நவிபிள்ளை. குடியேற்றதாரர் மற்றும் புகலிடம் தேடுவோர்
குறித்த கொள்கையை ஆஸ்திரேலிய அரசு மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள நவிபிள்ளை,
கடற்கரைகளில் தடுப்பு முகாம்களைத் திறப்பது மனித உரிமைகளை மீறுவதாக நோக்கப்படும் என்று
எச்சரித்துள்ளார். கடினமான பயணம் செய்து கரையேறுபவர்களைத் தடுப்பு முகாம்களில் வைப்பது
உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் நவிபிள்ளை கூறினார்.