தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவையின் நான்கு ஆண்டுகள் திட்டம்
ஆக.17,2012. இப்புதனன்று கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று தாய்லாந்து
கத்தோலிக்கத் திருஅவை நான்கு ஆண்டுகள் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள விசுவாச ஆண்டுடன் ஆரம்பமாகும் இத்திட்டம், 2015ம் ஆண்டு
நிறைவடையும் என்று தாய்லாந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Louis Chamniern Santisukniran
கூறினார். 2012-2013 ஆகிய இரு ஆண்டுகள் கொண்டாடப்படும் விசுவாச ஆண்டைத் தொடர்ந்து
2014-2015 ஆகிய இரு ஆண்டுகள் தாய்லாந்தில் புனித ஆண்டு கொண்டாடப்படும் என்று இத்திட்டத்தில்
அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டில், அடிப்படை கிறிஸ்தவக்
குழுமங்களை வளர்ப்பதில் தலத் திருஅவை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பேராயர் Santisukniran
கூறினார். அதே வேளையில், விவிலியத்தை மக்களிடம் இன்னும் அதிகமாக அறிமுகம் செய்யும்
முயற்சிகளை அருள் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பேராயர் வலியுறுத்தினார்.