2012-08-16 15:16:17

மங்களூர் மறைமாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவையொட்டி நிலமற்ற வறியோருக்கு வீடுகள்


ஆக.16,2012. இப்புதனன்று கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர நாளன்று மங்களூர் ஆயர் Aloysius Paul D'Souza, 28 வீடுகள் கட்டும் பணிகளை, Talapady என்ற பங்குதளத்தில் துவக்கிவைத்தார்.
மங்களூர் மறைமாவட்டம் தனது 125வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடிவருகிறது. இந்த ஜுபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக இம்மறைமாவட்டம் நிலமற்ற வறியோருக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதனன்று 28 வீடுகள் அமைக்கும் பணியை ஆயர் Paul D'Souza துவக்கி வைத்தார்.
ஒரு வாரத்திற்கு முன், இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட 100வது இல்லத்தை ஆயர் அவர்கள் Ranipur எனுமிடத்தில் ஆசீர்வதித்தார். இப்புதனன்று துவக்கப்பட்டுள்ள 28 வீடுகளையும் சேர்த்து, இத்திட்டத்தின் கீழ் இதுவரை 165 வீடுகள் உருவாகிவருகின்றன என்று மங்களூர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.