2012-08-15 16:03:24

தமிழ் அரசியல் கைதிகளின் கொலையைக் கண்டித்து யாழ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்


ஆக.15,2012. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இப்புதன் காலை இடம்பெற்ற போராட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் சில சிங்கள முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.
போராட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து தமது பங்களிப்பை செலுத்தியிருந்ததுடன், படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, இப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
மேலும் கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் யாழ் நகரில் இடம்பெற்ற போராட்டத்திற்குப் பல்கலைக்கழக ஆசியர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். இதேவேளை இந்தப் போராட்டத்திற்கும் தடையொன்று போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்ப்புக்கள் எவையுமின்றி போராட்டம் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.