கடினமாக உழைப்பவர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு 2வது இடம் என்கிறது சர்வதேச ஆய்வு
ஆக.14,2012. சீனர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களே பணியிடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாக
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. பணியிடங்களில் சேவை வழங்குவதில்
முன்னணி நிறுவனமாக உள்ள ரீகஸ் நிறுவனம் 86 நாடுகளில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம்
மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களுடன்
இருப்பதே மகிழ்ச்சி என்று 59 விழுக்காட்டினரும், பணியிடத்தில் இருப்பதே மகிழ்ச்சியாக
உள்ளது என்று 69 விழுக்காட்டினரும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியா
2வது இடத்தில் உள்ளது. குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவதைவிட, பணியிடங்களில்
அதிக நேரத்தைச் செலவிடுவதில் சீனர்களும் இந்தியர்களும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்
எனவும், இதற்கு எதிர்மாறாக, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளதாகவும் இந்த
ஆய்வு தெரிவிக்கிறது.