2012-08-14 17:05:50

இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்து திருப்பீடப் பேச்சாளர்


ஆக.14,2012. திருப்பீட இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் துவக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, பிரச்னைகளை வெளிப்படையாகவும் தீவிரமாகவும் அணுகுவதற்கான உறுதியான வழிமுறை என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
திருப்பீட இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்புடைய குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாகப் பதிவுச்செய்யப்பட்டுள்ளது, தொடரும் விசாரணைகள் குறித்த கடைசி வார்த்தையோ அல்லது இந்த நிகழ்வின் அர்த்தமோ, அது எவ்வாறு துவங்கியது என்பதன் விளக்கமோ அல்ல என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
ஒருவர் இதில் நேரடியாக ஈடுபட்டார் எனவும், இன்னொருவர் மறைமுகமாக இதற்கு உதவியுள்ளார் எனவும் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறிய திருப்பீடப்பேச்சாளர், அவர்களின் பெயர்களையும் உள்ளடக்கிய நீண்ட வெளிப்படையான அறிக்கையை இத்திங்களன்று திருப்பீடம் வெளியிட்டுள்ளது அதன் வழக்கமான அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்டதாக உள்ளது எனவும் கூறினார்.
இவ்விசாரணைகளுக்குத் திருத்தந்தை வழங்கி வரும் ஊக்கம் அவர் நீதித்துறையின் மீது கொண்டுள்ள மதிப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என மேலும் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.