2012-08-14 16:23:36

ஆகஸ்ட், 15, கவிதைக் கனவுகள் - சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!


வித்யாசாகரின் எழுத்துப் பயணம் என்ற இணையதளத்தில் வித்யாசாகர் எழுதியக் கவிதையிலிருந்து சில பகுதிகள்....

விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!

உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!

அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் -
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்

வீட்டில் உறங்கக்கூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைக்கூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!








All the contents on this site are copyrighted ©.