2012-08-13 16:16:36

நேபாளக் கத்தோலிக்கக் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ஆக.13,2012. நேபாளத்தலைநகர் காத்மண்டுவின் அன்னைமரி விண்ணேற்புக் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மத தீவிரவாதக்குழு ஒன்று தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, அக்கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேபாள பாதுகாப்பு இராணுவம் என தன்னை அழைத்துக்கொள்ளும் இந்து தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவர், விண்ணேற்பு அன்னை மரியா கோவில் பங்குத்தந்தை இராபின் இராயை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களுக்கு உதவி வழங்கவில்லையெனில் கோவிலை மீண்டும் ஒருமுறை தாக்க உள்ளதாக மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே 2009ம் ஆண்டு இதே கோவில், வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டதில் ஒரு 14 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளியன்று இக்கோவில் பங்குத்தந்தை பெற்ற மிரட்டலைத்தொடர்ந்து, தற்போது இக்கோவில் மற்றும் ஏனைய கிறிஸ்தவக் கட்டிடங்களுக்கான நேபாள காவல்துறையின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.