2012-08-11 17:01:07

ஆகஸ்ட் 12 - அகில உலக இளையோர் நாளுக்கென ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி


ஆக.11,2012. உலக வரலாற்றில் இதுவரைக் கண்டிராத அளவு வளர்ந்துள்ள இளையோரின் எண்ணிக்கை நம்பிக்கை தருகிறது; இவர்களில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 12 , இஞ்ஞாயிறன்று கொண்டாடப்படும் அகில உலக இளையோர் நாளுக்கென சிறப்புச்செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர், இளையோரிடம் உள்ள திறமைகளைச் சரியான வழியில் பயன்படுத்தினால் உலகக் குடும்பம் செழித்து வளரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகம் சந்தித்துவரும் பொருளாதாரச் சரிவு இளையோரையே பெருமளவு பாதித்துள்ளது என்று கூறிய பான் கி மூன், இந்த நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் சரியானதொரு தீர்வை விரைவில் காணாவிடில், இந்தத் தலைமுறையை நாம் இழக்கும் ஆபத்து உள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
புதிய எண்ணங்களின் விளைநிலங்கலாய் இருக்கும் இளையோருக்குத் தகுந்த கல்வியையும், பாதுகாப்பான பணிச் சூழலையும் நாம் உருவாக்கினால், இளையோர் உலக அமைதிக்காக உழைக்கும் சிறந்த தூதர்களாக மாறுவார்கள் என்று UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.