2012-08-11 16:38:57

ஆகஸ்ட் 12, கவிதைக் கனவுகள் - விளையாட்டு வாழ்க்கை


எழுத்து.காம் என்ற இணையத்தளத்தில் HARIHARA NARAYANAN.V என்பவர் எழுதிய கவிதையை அடித்தளமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கவிதை.

காகிதத்தை மடித்தே
கப்பலைச் செய்யுங்கள்
மழை விழும்போது
மழலையை அழைத்து
கொட்டுகின்ற சாரலில்
குதூகலமாய் ஆடியே - வீதியில்
ஓடுகின்ற ஓடையிலே - கப்பல்
ஓட்டியே மகிழுங்கள்....
கப்பல் மிதப்பதைக் கண்டு
கைதட்டும் குழந்தையிடம்
கப்பலோட்டியத் தமிழன் என்ற
கதையைச் சொல்லுங்கள்,
கனவை ஊட்டுங்கள்.
மழை விடும்போது
மழலையின் மனதுக்குள்
மலைகள் போல கனவுகள் வளர்ந்திருக்கும்,
நம்புங்கள்...








All the contents on this site are copyrighted ©.