எழுத்து.காம் என்ற இணையத்தளத்தில் HARIHARA NARAYANAN.V என்பவர் எழுதிய கவிதையை அடித்தளமாக
வைத்து எழுதப்பட்ட ஒரு கவிதை.
காகிதத்தை மடித்தே கப்பலைச் செய்யுங்கள் மழை
விழும்போது மழலையை அழைத்து கொட்டுகின்ற சாரலில் குதூகலமாய் ஆடியே - வீதியில் ஓடுகின்ற
ஓடையிலே - கப்பல் ஓட்டியே மகிழுங்கள்.... கப்பல் மிதப்பதைக் கண்டு கைதட்டும்
குழந்தையிடம் கப்பலோட்டியத் தமிழன் என்ற கதையைச் சொல்லுங்கள், கனவை ஊட்டுங்கள்.
மழை விடும்போது மழலையின் மனதுக்குள் மலைகள் போல கனவுகள் வளர்ந்திருக்கும், நம்புங்கள்...