தீய்க்க வேண்டிய தீ.... மாய்க்க வேண்டிய பேய் தீண்டாமை உணர்வுகளால் மனிதர்
செய்த பேராயுதம் காலந்தோறும் புகைந்து கொண்டிருக்கும் நச்சுப்புகை தீண்டாமை. தீண்டாமையின்
தற்போதைய வயது இருபத்தோர் நூற்றாண்டு “மனிதர்” என்ற பரந்த முகவரியை மறந்தவர்கள் தீண்டாமை
எனும் இருண்ட வீட்டை நம்பி கிழியத் தொடங்குகிறார்கள்... பிறப்பில் இல்லை வேறுபாடு இறப்பில்
இல்லை மாறுபாடு பின்.. ஏன் வாழ்வதில் மட்டும் நமக்குள் பாகுபாடு... எந்த நோய்க்கு
மருந்து கிடைத்தாலும் தீண்டாமை நோய்க்கு மனிதரின் மனமாற்றமே மருந்தாகும். ஆறறிவோடு
பிறந்த அத்தனை பேருக்கும் “மனிதர்” என்ற ஒரே பெயர்தான்; பிரிவுக்கு இடமேயில்லை