2012-08-09 16:37:44

ஓடிஸ்ஸாவில் கிறிஸ்தவப் போதகர் இறந்தது, விபத்தல்ல ஒரு கொலையே - Baliguda நீதி மன்றம் தீர்ப்பு


ஆக.09,2012. இந்திய நீதி மன்றங்கள் வெகு தாமதமாகச் செயல்படுகின்றன என்றும், மதக் கலவரங்கள் குறித்த வழக்குகளில் நீதி மன்றங்கள் காட்டும் தாமதப்போக்கு சிறுபான்மையினருக்குப் பெரும் பாதகமாக அமைகிறது என்றும் இந்தியக் கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் Sajan George கூறினார்.
2011ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி ஓடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் Michael Nayak என்ற ஒரு கிறிஸ்தவப் போதகர் இந்து அடிப்படைவாத கும்பலால் கொல்லப்பட்டார். இவரது கொலையை ஒரு விபத்து என்று கூறி, காவல் துறையினர் இந்த வழக்கைத் தொடரவில்லை.
இது விபத்தல்ல ஒரு கொலையே என்று Baliguda நீதி மன்றம் இப்புதனன்று தீர்ப்பு அளித்து, Michael Nayakகைக் கொன்ற கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நம்பிக்கைதரும் ஒரு அடையாளமாக இருந்தாலும், இந்தியாவில் நீதித் துறையின் தாமதமான நடவடிக்கைகள் அடிப்படைவாத கும்பல்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது என்று Sajan George கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாய் ஒடிஸ்ஸா மாநிலத்தில் 3500க்கும் அதிகமான புகார்களைச் சிறுபான்மையினர் அளித்துள்ளபோதிலும், காவல்துறையினரும், நீதித் துறையும் 827 புகார்களையே வழக்குகளாக எடுத்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.