2012-08-09 16:12:17

ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கருப்புநாள் கடைபிடிக்கப்படும்


ஆக.09,2012. இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிகள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கருப்புநாள் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருப்பு நாளையொட்டி, டில்லி பேராயர் Vincent Concessao மற்றும் வடஇந்திய கிறிஸ்தவ சபையின் பொதுச் செயலர் Alwan Masih ஆகியோரின் தலைமையில் டில்லியில் ஒரு போராட்ட ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதனன்று இந்திய பாராளுமன்றத்தில் துவங்கிய மழைக்காலக் கூட்டத்தொடரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் சட்டமாக வேண்டும் என்று ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற ஒரு போராட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நடைபெறும் இந்த பாராளுமன்ற அமர்வில் அஸ்ஸாமில் 73 பேரை பலி வாங்கிய கலவரங்கள், அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் மின்சக்தி துண்டிப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.