நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் அரசியல் உள்நோக்கம்
கொண்டவை – அபுஜா பேராயர்
ஆக.08,2012. ஆகஸ்ட் 6, இத்திங்களன்று நைஜீரியாவின் Okene எனுமிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குக்
காரணமானவர்களைக் கண்டுபிடிக்க அந்நகரில் பெரும்பான்மையினராய் இருக்கும் இஸ்லாமியருக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளார் Abuja பேராயர் John Onaiyekan. நைஜீரியாவில் அண்மைய மாதங்களில்
கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகளைக் குறித்து வத்திக்கான் வானொலிக்கு
அளித்த பேட்டியொன்றில், இவ்வன்முறைகள் மத சார்பானவை என்று கூறுவதை விட, அரசியல் உள்நோக்கங்கள்
கொண்டதென்பதை உணரலாம் என்று பேராயர் Onaiyekan கூறினார். அரசியல் கலந்துள்ள இந்த வன்முறைகளிலிருந்து
மக்களைக் காப்பதற்கு அரசு வலுவிழந்திருப்பதுபோல் தெரிகிறது என்ற தன் கவலையையும் வெளியிட்டார்
பேராயர் Onaiyekan. இந்த வன்முறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, கிறிஸ்தவர்களும்
ஆயதம் தாங்கவேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் Onaiyekan,
வன்முறைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண, இஸ்லாமியர்கள் உதவினால் மட்டுமே இந்த வன்முறையைக்
களையமுடியும் என்று எடுத்துரைத்தார்.