2012-08-08 15:43:16

"இணையதளம் மீது இளையோர் கொண்டுள்ள கட்டுப்பாடற்ற ஈர்ப்பு" - கத்தோலிக்கக் கருத்தரங்கு


ஆக.08,2012. Facebook, Twitter போன்ற இணையதள நடவடிக்கைகளில் இளையோர் அளவுக்கதிகமான நேரம் செலவழிப்பதால், அவர்கள் அடையவேண்டிய வளர்ச்சியும், வாழ்வில் பெறவேண்டிய உறவுகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன என்று கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளின் கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர் அமைப்பு, Tai Pei நகரில் அண்மையில் நடத்திய ஒரு வாரக் கருத்தரங்கில் "இணையதளம் மீது இளையோர் கொண்டுள்ள கட்டுப்பாடற்ற ஈர்ப்பு" என்ற தலைப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஜப்பான், தென்கொரியா, தாய்வான், ஹாங்காங் என்ற பல நாடுகளிலிருந்து இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள், இணையதளத்தில் இளையோர் அளவுக்கு அதிகமான நேரம் செலவிடுவதால் அவர்களது விசுவாச வாழ்வு உட்பட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் கவலை தரும் போக்கு அதிகரித்துள்ளது என்பதைக் குறித்து பேசினார்கள்.
ஜப்பான் சுனாமி நேரத்தில் சொந்தங்களைத் தேடுவதற்கு இணையதளங்கள் பெருமளவில் உதவிகள் செய்தன என்பதை மறுக்கமுடியாது என்று கூறிய இளையோர், கணணி, இணையதளம் போன்ற முன்னேற்றங்கள் மனித சமுதாயத்திற்கு பெரும் பயன்களை வழங்கியுள்ளன என்றாலும், அவற்றின் மூலம் விளைந்துள்ள ஆபத்துக்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன என்பதையும் எடுத்துரைத்தனர்.








All the contents on this site are copyrighted ©.