2012-08-07 16:00:42

ஜாம்பியாவில் மலேரியா, எய்ட்ஸ் நோய்களை ஒழிப்பதற்கு நலப்பணியாளர்கள் கடும் உழைப்பு


ஆக.07,2012. ஜாம்பியா நாட்டில் மலேரியா, எய்ட்ஸ், காசநோய் போன்ற நோய்களை முற்றிலும் பரவ விடாமல் தடுப்பதற்கு ஏறத்தாழ 1,200 மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் 5 வயதுக்குட்பட்ட சிறாரில் 10க்கு குறைந்தது இருவர் வீதம் மலேரியாவால் இறக்கின்றனர், இந்நோயை 2015ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிப்பதற்குத் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர் நலப்பணியாளர்கள்.
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து நலப்பணியாளர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் மத்தியில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இப்பணியைச் செய்து வருகின்றனர்.
ஏறத்தாழ 1,200 மருத்துவர்கள் ஜாம்பியாவின் ஒரு கோடியே 30 இலட்சம் பேரின் நலவாழ்வைக் கண்காணித்து வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.