2012-08-04 14:53:26

சிரியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்


ஆக.04,2012. சிரியாவில் சண்டை வலுத்து வருவதால் அதனை நிறுத்துவதற்கு அனைத்துலக சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
சிரியாவில் சண்டை தொடர்ந்து நடந்து வருவதால் அதனைக் கண்டிக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொது அவையில் இவ்வெள்ளிக்கிழமை கேட்டுள்ளார் பான் கி மூன்.
ஐ.நா. எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறதோ அவை அனைத்தையும் பரிசோதிக்கும் விதமாக சிரியாவின் இப்போதைய நிலைமை இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
தமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் சண்டை மிகவும் கொடூரமாய் இடம்பெறுவதாக இச்சனிக்கிழமை செய்திகள் கூறுகின்றன.
சிரியாவில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.