கராச்சி பேராயர் : கிறிஸ்தவத் தாதியருக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை
நடத்த வலியுறுத்தல்
ஆக.04,2012. பாகிஸ்தானின் கராச்சியில் கிறிஸ்தவத் தாதியருக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட விவகாரம்
குறித்து விசாரணை நடத்தப்படுமாறு அந்நாட்டு நீதி மற்றும் அமைதி அவையைக் கேட்டுள்ளார்
கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ். தாதியர் பயிற்சி பெறும் ஒன்பது கிறிஸ்தவத் தாதியருக்கு
கடந்த ஜூலை 29ம் தேதி தேனீரில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய பேராயர்
கூட்ஸ், இதன் நோக்கம் மதம் சார்ந்ததா அல்லது கொலை செய்யும் நோக்கம் கொண்டதா அல்லது முற்றிலும்
தற்செயலாக நடந்ததா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார். எதுவாக
இருந்தாலும் இவ்விவகாரம் கவலையுடன் நோக்கப்பட வேண்டியது என்றுரைத்த பேராயர், சிறுபான்மையினர்
நசுக்கப்படுவது குறித்து பாகிஸ்தான் அரசு கண்மூடித்தனமாகவே இருக்கின்றது என்றும் குறை
கூறினார்.