நாசரேத்தூர் இயேசு என்ற தனது நூலின் மூன்றாவது பாகத்தை எழுதி முடித்துள்ளார் திருத்தந்தை
ஆக.03,2012. காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் தற்போது
ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நாசரேத்தூர் இயேசு என்ற அவரது நூலின்
மூன்றாவது பாகத்தை எழுதி முடித்துள்ளார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நூல்
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அவ்வலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், வருகிற
அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டையொட்டி புதிய திருமடல் ஒன்றைத் திருத்தந்தை
வெளியிடக்கூடும் என்று கர்தினால் பெர்த்தோனே கூறினார். 2005ம் ஆண்டில் Deus caritas
est, 2007ம் ஆண்டில் Spe salvi , 2009ம் ஆண்டில் Caritas in veritate ஆகிய திருமடல்களையும்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.