ஆக.03,2012. மத்திய ஆப்ரிக்காவில் மிகப் பெரிய நாடான காங்கோ குடியரசில் அமைதியும் ஒன்றிப்பும்
ஏற்படுவதற்கென அந்நாட்டு ஆயர்கள் “நம்பிக்கைப் பேரணி” ஒன்றை நடத்தியுள்ளனர். காங்கோ
குடியரசை பிரிக்க முயற்சிக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,
அந்நாட்டின் 47 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 2 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து இந்த
எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர். காங்கோ குடியரசில் 1996ம் ஆண்டு முதல் இடம்பெற்று
வரும் உள்நாட்டுச் சண்டையில் 54 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளவேளை, தற்போது
அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் புதிதாகச் சண்டை தொடங்கியுள்ளது. இதில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான
அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். புரட்சியாளர்கள், ருவாண்டா நாட்டு ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.