கவிதைக்கனவுகள் - கலில் கிப்ரான் கவிதை - என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
என் ஆத்மாவே ! நீ ஏன் அழுகிறாய் ? என் பலவீனத்தை நீ அறியாயோ ? உன் கண்ணீரின் கூர்மை
காயப் படுத்தும் என்னை ஊடுருவி ! காரணம் என்பிழை தெரியா தெனக்கு !
உன் உபதேசங்களைக்
கவனமாய் நான் பின்பற்றி இரை யானது என் வாழ்வு முழுவதும் ! எப்படி நோகிறது பார்
என் இதயம் ? களைத்துப் போனது என் வாழ்க்கை பின்பற்றி உன்னை !
வாலிப வயதெனக்கு
வழங்கியது வாழ்வில் ஓர் நம்பிக்கை ! கண்டிக்கும் அது என்னை இப்போது கவனக் குறைவால்
பேணிப் பாராததால் ! எப்போதும் ஏன் என்னை வற்புறுத் துகிறாய் என் ஆத்மாவே ?
எனது
இன்பங்களை எல்லாம் புறக்க ணித்தேன் ! உன் அறிவுரைக் குடன்பட்டு என்மீது புகுத்திய உன்
நியதியைப் பின்பற்றி வாழ்வின் பூரிப்பைத் துறந்தேன் ! நீதி வழங்கு நீ எனக்கு
! அல்லது கொடு மரணத்தை விடுவிக்க என்னை நியாயமே உனது உன்னத நெறியான தால்
!
என் மீது பரிவு காட்டு என் ஆத்மாவே ! என் மீது அன்பை ஏற்றி இருக்கிறாய் என்னால் சுமக்க
முடியாப் பளுவாய் ! நீயும் அன்பும் இணை பிரியா வல்லினம் ! ஆனால் நானும் செல்வமும் இணை
பிரியா பலவீனம் ! எப்போ தாவது போராட்டம் நின்று விடுமா வல்லினத் துக்கும் மெல்லினத்
துக்கும் இடையே ?
இரவின் மௌன வேளையில் தேவனைக் காணச் சென்று இனித்திடும் தரிசனம்
பெறுவாய் ! ஆயினும் இந்த உடல் என்றும் முடங்கிக் கிடக்கும் பிரிவிலும் நம்பிக்கை
இழப்பிலும் கசப்ப டைந்து ! இதுதான் எனக்குச் சித்திரவதை என் ஆத்மாவே ! பரிவு
காட்டு என்மீது என் ஆத்மாவே !