இரக்ஷாபந்தன் என்ற விழாவின்போது 10,000 மரக் கன்றுகளை நட்டுவைக்கும் விழா
ஆக.01,2012. குடும்பத்து உறவுகளை உறுதிப்படுத்தும் இரக்ஷாபந்தன் என்ற விழாவின்போது குடும்ப
உறவுகள் மட்டுமல்லாமல், இயற்கையுடன் நாம் கொண்டுள்ள உறவையும் உறுதிப்படுத்த வேண்டும்
என்று GWAF என்ற சுற்றுச்சூழல் பாதுக்காப்பு அமைப்பின் செயலரான Navdeep Asija கூறினார். ஆகஸ்ட்
2ம் தேதி இவ்வியாழனன்று இந்தியாவிலும், இன்னும் உலகின் பிற நாடுகளிலும் இரக்ஷாபந்தன்
விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது வழக்கமாக பெண்கள் ஆண்களின் கைகளில் அலங்காரக்
கயிற்றைக் கட்டுவது வழக்கம். இவ்வாண்டு இவ்விழாவின்போது, பஞ்சாபில் உள்ள Fazilka என்ற
நகரில் உள்ள பெண்கள் ஆண்களிடமிருந்து மரக் கன்றுகளைப் பரிசாகப் பெறும் வகையில் GWAF அமைப்பு
முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் பெண்கள் அப்பகுதியில் 10,000
மரக் கன்றுகளை நட்டுவைக்கும் விழா நடைபெறும் என்று இவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.