2012-07-31 15:56:54

ஆப்ரிக்காவில் கருத்தடை சாதனங்களை ஊக்குவிப்பது குறித்து கென்ய ஆயர்கள் கவலை


ஜூலை,31,2012. ஆப்ரிக்காவில் கருத்தடை சாதனங்களை ஊக்குவிப்பதற்கு பன்னாட்டு அளவில் முயற்சிகள் எடுக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர் கென்ய ஆயர்கள்.
கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது மனிதத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றது மற்றும் இந்நடவடிக்கை திருஅவையின் போதனைகளுக்கு எதிரானது, குறிப்பாக பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற கென்யாவில் இது அவர்களின் மத நம்பிக்கைக்கு முரணானது என்று கூறியுள்ளனர் கென்ய ஆயர்கள்.
இது ஏற்கனவே சமுதாயத்தின் அறநெறிக்கூறுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் இது மனித மாண்பையும் ஒருங்கமைவையும் புண்படுத்துவதாக இருக்கின்றது என்றும் அவர்கள் கூறினர்.
2020ம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான ஆப்ரிக்கச் சிறுமிகள் மற்றும் பெண்களுக்குச் செயற்கைக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இது கற்பனைக்கு எட்டாதது மற்றும் ஆபத்தானது என்றும் கென்ய ஆயர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.