நேபாளத்தில் தனியார் பள்ளிகள் தாக்க்கப்படுவதற்கு எதிராக தலைவர்களின் குரல்கள்
ஜூலை,30,2012. நேபாளத்தில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் தாக்கப்படுவது
குறித்து தங்கள் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு அரசுத்தலைவரும் ஐ.நா.
அதிகாரிகளும். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கல்வி நிலையங்களை 'அமைதியின்
இடங்களாக' அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள இத்தலைவர்கள், வன்முறைகளால் பாதிக்கப்படாத
கல்வியைப் பெறுவதற்கு குழந்தைகளுக்கு இருக்கும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும்
கேட்டுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட்டு, சிறார்களின்
கல்வி கற்கும் உரிமை உறுதிச் செய்யப்பட வேண்டும் என நேபாள பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும்
செய்தி அனுப்பியுள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் ராம் பரன் யாதவ். நேபாளத்தில் மொத்த
மாணவர்களுள் பாதிப்பேர் அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை நடத்தி வரும் 33 பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.