ஜூலை,28,2012. Ghana அரசுத்தலைவர் John Evans Atta Mills இறந்ததற்கு அனுதாபம் தெரிவிக்கும்
இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். John Evans Atta Mills
ஆற்றிய பொதுநலப் பணிகளை நினைவுகூரும் இவ்வேளையில் அவர் சனநாயகக் கொள்கைகளுக்காகத் தன்னை
அர்ப்பணித்திருந்ததை நினைவுகூர்வதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவரின்
இறப்பு, நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் தருணமாக அமையுமாறு கேட்டுக் கொண்டார். Ghanaவின்
புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள John Dramani Mahamaவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
ஒட்டுமொத்த கானா நாட்டு மக்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருப்பதோடு, அந்நாடு
அமைதியிலும் வளமையிலும் ஆசிர்வதிக்கப்படும்படியாகத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
திருத்தந்தை. அரசுத்தலைவர் John Evans Atta Mills இம்மாதம் 24ம் தேதி திடீரென நோயுற்று
மரணமடைந்தார்.