ஆறு மாதத்தில் 5,000 பேருக்கு சிகிச்சை: கல்லீரல் நோய்ப் பாதிப்பு அதிகரிப்பு
ஜூலை,28,2012. தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் 5,000 பேர் கல்லீரல் நோய்க்காகச் சிகிச்சை
பெற்றுள்ளனர் என்று சென்னை பொது மருத்துவமனை கல்லீரல் துறைத் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜூலை
28ம் தேதி இச்சனிக்கிழமையன்று உலக கல்லீரல் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை
சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் கல்லீரல், கல்லீரல்
புற்றுநோய், கல்லீரல் இரத்தக் கட்டி, கல்லீரல் சுருக்கம் உட்பட, 12 வகையான கல்லீரல்கள்
வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
பார்வையிட்டனர். மேலும், கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலியும்
நடந்தது.