2012-07-27 16:42:58

காங்கோவின் "balkanization" திட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்து கொள்ளுமாறு ஆயர்கள் அழைப்பு


ஜூலை,27,2012. ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசை இன மற்றும் புவியியல் கோடுகளின்படி பிரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள "balkanization" என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், வருகிற ஆகஸ்ட் முதல் தேதி நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
காங்கோவின் கிழக்குப் பகுதியில் புரட்சியாளர்கள் புகுந்து தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறிய காங்கோ ஆயர் பேரவையின் பொதுச் செயலர் அருட்பணி Leonard Santedi, இம்மாதம் 31ம் தேதியிலிருந்து நாட்டின் அமைதிக்காகச் செபிப்பதற்கு அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காங்கோவைப் பிரிப்பதற்கானத் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அருட்பணி Santedi கூறினார்.
ஆகஸ்ட் முதல் நாள், காங்கோ மூதாதையர் மற்றும் பெற்றோரின் விழாவாகச் சிறப்பிக்கப்படுகிறது. அந்நாள் காங்கோவில் தேசிய விடுமுறை தினமாகும். எனவே காங்கோ என்ற ஒரே நாட்டைப் பாதுகாப்பதற்கு இந்நளில் போராட வேண்டுமென்றும் அக்குரு கேட்டுக் கொண்டார்.
Tutsi இனத்தவரைச் சேர்ந்த M23 என்ற புரட்சிக்குழு, காங்கோ இராணுவத்துடன் சண்டையிட்டதில் 2 இலட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.